Depression
மனச்சோர்விலிருந்து
விடுபடுங்கள்
மனச்சோர்வு என்றால் என்ன?
மனச்சோர்வு (depression) என்பது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒரு சாதாரண அனுபவம். வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் வெறுப்பு, சலிப்பு, துக்கம் போன்ற உணர்வுகளால் நாம் பாதிக்கப்படுகிறோம். இதற்கான காரணங்கள் அனைவரும் அறிந்ததே - ஏமாற்றம், வெறுப்பு, சலிப்பு, நெருக்கமான ஒருவரை அல்லது ஒன்றை இழத்தல். வாழ்க்கையின் நெருக்குதலுக்கு உள்ளாகி, நாம் வெளிப்படுத்தும் தற்காலிக எதிர்விளைவுகளே இந்த வருத்தமும் துக்கமும். ஆனால், குறிப்பிட்ட ஒரு நிகழ்வால் அல்லது காரணம் எதுவுமே இல்லாமல் ஒருவருக்கு மனச்சோர்வு நிறைந்த மனநிலை தொடருமானால், அவர் மருத்துவ உதவியை நாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பது பொருள். அவர் கடுமையான மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது உறுதி. –
இந்தப் பாதிப்பிற்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது; இதை எளிதாகக் குணப்படுத்திவிடலாம். இது எளிதாகப் புறக்கணிக்கக் கூடிய அளவுக்கான பலமின்மையோ அல்லது உடல்நிலையோ அல்ல.
மனச்சோர்வின் வகைகள்
மனச்சோர்வுக் கோளாறு என்பது உங்கள் உடல் முழுவதையும் பாதிக்கும் ஒரு நோயாகும். இது உங்கள் உடல், மனம், எண்ணம், சிந்தனை ஆகிய அனைத்தையும் பாதிக்கும். மனச்சோர்வுக் கோளாறுகள் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன.
1.
கடுமையான மனச்சோர்வு
நம்முடைய பணி, ஆர்வம், குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடம் காட்டும் உணர்வுகள் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடிய அறிகுறிகள் ஒருவரிடம் தென்பட்டால் அதை 'கடுமையான மனச்சோர்வு' என்று வகைப்படுத்தலாம்.
இந்நிலையில் குறைந்தது இரண்டு வாரங்களுக்குக் கடுமையான மற்றும் தொடர்ச்சியான மனச்சோர்வு மனநிலையில் பாதிக்கப்படுவதோடு அவருடைய அன்றாட செயல்பாடுகளிலும் இதனுடைய குறுக்கீடு இருக்கும். இதுபோன்ற நிகழ்வுகள் ஒருவடைய வாழ்வில் ஒரிரு முறையோ அல்லது சில தடவைகளோ நேரிடலாம்.
2,
'டைஸ்திமியா' எனப்படும் மிதமான மனச்சோர்வு
ஒரு மிதமான வடிவத்தில் தோன்றும் மனச்சோர்வே ''டைஸ்திமியா' என்று அழைக்கப்படுகிறது. ஒருவரிடம் நீண்ட காலமாகக் காணப்படும் மனச்சோர்வு இந்த வகைக்குள் அடங்கும். மனச்சோர்வு நிறைந்த மனநிலை குறைந்தது இரண்டு ஆண்டுகள் நீடிக்கும். அத்தோடு உடல் ஊக்கம், பசி, தூக்கம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தோன்றும். அவர் தன் சுயமதிப்பை இழப்பதோடு நம்பிக்கை இழந்தவராகவும் காணப்படுவார். இது அவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவதோடு அவருடைய செயல்பாட்டையும் பாதிக்கும். ஆனால், இந்த 'டைஸ்திமியா' மேலே குற்றிப்பிட்ட 'கடுமையான மனச்சோர்வு' அளவுக்கு மோசமானதல்ல. அதே சமயம் ' டைஸ்திமியாவால்' பாதிக்கப்பட்டவருக்கு 'கடுமையான மனச்சோர்வு' வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காத பட்சத்தில் 'டைஸ்திமியா' கடுமையான மனச்சோர்வாக மாறிவிடும்.
ஒருவர் தொடர்ச்சியான லேசான மனச்சோர்வு நிலையிலும் எப்போதாவது கடுமையான மனச்சோர்வு பாதிப்பிலும் இருப்பாரானால், அவர் 'இரட்டை மனச்சோர்வால்' பாதிக்கப்பட்டுவிடுவார்.
மனச்வோர்வுக்கான அறிகுறிகள்
v
ஒருவரிடம் இரண்டு வாரங்களுக்கு மேல் காணப்படும் சோகமான அல்லது எதிலும் ஆர்வம் காட்டாத மனநிலை.
v
வழக்கமான நடவடிக்கைகளில் ஆர்வமோ மகிழ்ச்சியோ இன்றி காணப்படுதல்.
v
சாதாரண வேலைகள், எளிதாக முடிவெடுத்தல் ஆகியவற்றில் கூட விருப்பமோ ஊக்கமோ காட்டாது இருத்தல்.
v
கடுமையான உடல் சோர்வு
v
கவனம்செலுத்துவதில் அல்லது முடிவெடுத்தலில் சிரமப்படுதல்
v
ஞாபகச் சக்தியில் குழப்பம்
v
பதற்றம் மற்றும் அமைதியற்ற நிலை
v
பசி குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ இருத்தல்; அதன் விளைவாக உடல் எ¬ ட குறையும் அல்லது கூடும் போக்கு.
v
தூக்கமின்மை அல்லது அளவுக்கு அதிகமாக உறங்குதல்.
v
வெளிப்படையாக அன்புகாட்டாது இருத்தல்; பாலுறவில் ஆர்வமின்மை.
v
தன்நம்பிக்கை இழப்பது, மக்கள் வேண்டாமை
v
எப்போதும் எரிச்சலுற்றுக் காணப்படும் மனநிலை
v
குற்ற உணர்வு, உபயோகமற்றவர் அல்லது பயனற்றவர் என்ற உணர்வு, நம்பிக்கையின்மை ஆகியவை காணப்படுதல்.
v
நாளின் ஏதாவது ஒரு பொழுதில், பொதுவாகக் காலை நேரத்தில் மோசமான மனநிலையில் இருத்தல்
v
தற்கொலை எண்ணம் தோன்றுதல்,இவை ஒருவர் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதற்கான அடையாளங்கள் ஆகும். அவருக்கு உடனடியான மருத்துவ உதவி தேவை என்பதற்கான அறிகுறிகளே இவை.
மனச்சோர்வுக்கான காரணங்கள்
1.
மரபணுக் காரணிகள்:
சிலவகை மனச்சோர்வு, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் காணப்படுகிறது. பரம்பரையாகவோ அல்லது மரபணுக் காரணிகளாலோ மனச்சோர்வு கடத்தப்படுவதை இது சுட்டிக்காட்டுகிறது. இதைத் தவிர ஒருவருடைய பரம்பரையில் யாருக்குமே இந்தக் கோளாறு இல்லாத நிலையிலும் மனச்சோர்வு தோன்றலாம். இது பரம்பரை நோயாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், பெரும்பாலும் மனச்சோர்வு கோளாறுகளுக்குக் காரணம் மூளையில் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சில வகை வேதிப் பொருட்கள் சுரப்பதுதான்.
2.
மன அழுத்தத்தை உண்டாக்கிய நிகழ்வுகள்;
ஒருவருடைய வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகளே மனச்சோர்வுக்குக் காரணமாக அமையலாம். மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடிய ஒரு நகிழ்வு, ஒருவருடைய வாழ்வில் நடந்துவிட்டாலும் கொஞ்சம் நாட்களில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவோம். நெருக்கமானவர்களை இழத்தல், மண முறிவு, வேலையை இழத்தல், பணியிலிருந்து ஓய்வுபெறுதல், புது வீட்டுக்குச் செல்லுதல் போன்ற மாற்றங்கள் ஒருவரின் மனச்சோர்வை அதிகப்படுத்தலாம்.
3,
சமூகப் பாதுகாப்பின்மை
மன இறுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல்களும் மனச்சோர்வை அதிகப்படுத்தலாம். தனிமை, சமூகத்தினரால் புறக்கணிக்கப்படுதல், அதிக கவலை, உடல் நிலை பாதிப்புகள் போன்றவையும் மனச்சோர்வு உருவாகக் காரணமாக அமைந்துவிடுகின்றன. உதாரணத்திற்குச் சில பெண்கள் குடும்பத்தினரின் போதிய ஆதரவு இல்லாததால் குழந்தைகபேறுக்குப் பிறகு தொடர்ச்சியான மனச்சோர்வு நிலையை அடைகின்றனர்.
4.
உடல் நலமின்மை
பொதுவாக உடல்நலமில்லாதவர்களை மனச்சோர்வும் உடன்சேர்ந்து வருத்துகிறது. குறிப்பாக உயிர்க்கொல்லி நோய்களான புற்றுநோய், இதய நோய், போன்றவைகளும் கடும் வலியை ஏற்படுத்தும் மூட்டுவாதம், பக்கவாதம், மூச்சுக்குழல் அழற்சி போன்ற நோய்களும் மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன. 'இன்புளுயன்சா' போன்ற தொற்று நோய் தாக்கத்திற்குப் பிறகு சில வகை மனச்சோர்வுகள் தொடரவும் வாய்ப்புள்ளது.
5.
ஆளுமை
மனச்சோர்வுக்கான ஒரு காரணமாக ஒருவருடைய ஆளுமை அமைந்துவிடலாம். குறிப்பிட்ட சூழலில், £யர் மனச்சோர்வுக்கு ஆளானாலும், ஒருவருடைய ஆளுமை அல்லது முன்அனுபவங்களின் அடிப்படையில் மனச்சோர்வினால் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பாதிக்கப்படுகிறார்கள்.
6.
பால் வேறுபாடு
பொதுவாக ஆண்களை விட பெண்களே அதிகமான மனச்சோர்வினால் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படாதது, உணர்ச்சிகளை அடக்கிவைத்துக்கொள்ளுதல், கோபமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிடுதல், குடித்து உணர்ச்சிகளை தணித்துக்கொள்ளுதல் போன்றவை இதற்குக் காரணங்களாக இருக்கலாம். பெரும்பாலும் பெண்களே அதிக மனஅழத்தத்திற்கு ஆளாகிறார்கள். உதாரணமாக வேலை பார்த்துக்கொண்டே குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு ஏற்படுகிறது.
7.
பருவ வயதினர்
மனச்சோர்வு மனநிலை பருவ வயதினரிடம் பொதுவாகக் காணப்படுகிறது. ஹார்மோன் சுரப்பு காரணமாக உடலில் ஏற்படும் மாற்றங்கள், மாற்றங்களின் தொடர்ச்சியான எழும் மன அழுத்தம், பெற்றோர்களுடனான சண்டை போன்றவைகளே மனச்சோர்வுக்குக் காரணங்களாக அமைகின்றன. மேலும் நெருக்கமான நண்பரை அல்லது உறவினரை இழத்தல், ¢ நட்பில் விரிசல், பள்ளியில் ஏற்படும் தோல்வி போன்ற மனநிலையை பாதிக்கக்கூடிய இயல்பான நிகழ்வுகளுக்கு எதிர்விளைவாக மனச்சோர்வு தோன்றலாம்.
சுயமதிப்பைக் குறைவாகப் பெற்றுள்ள பருவ வயதினர், தங்களைத் தாங்களே அதிகமாக ஆராய்ந்து பார்த்துக்கொள்வார்கள். மேலும் விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தாங்கிக்கொள்ளும் மனதிடம் இல்லாத இளம் வயதினர், மனச்சோர்வுக்கு எளிதாக உள்ளாகிவிடுகிறார்கள்.
8.
முதியவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு
பல்வேறு காரணங்களால் முதியோரிடம் ஏற்படும் மனச்சோர்வைக் கண்டுபிடிப்பது சிரமமான காரியமாக உள்ளது. வயதாவதால் தோன்றும் அறிகுறிகளும், மனச்சோர்வுக்கான அறிகுறிகளும் பலவிதங்களில் ஒத்துப்போவதால், எந்த அறிகுறி எதனால் ஏற்பட்டது என்று இனங்காண்பது மருத்துவ ரீதியாகவே ஒரு சவாலான செயலாக உள்ளது. முதியோரிடம் தோன்றும் மனச்சோர்வுக்கான காரணங்களாகப் பலவற்றைச் சொல்லலாம். மனைவி அல்லது கணவனை இழத்தல்; ஞாபக சக்தியை இழந்துவிடுதல்; மாறிவரும் சூழல்களான வீடு மாற்றம், பணிக்குப் பின் ஓய்வு, குடும்பத்தில் மாற்றம் போன்ற மாறிவரும் சூழல்கள் முதியோரிடம் ஏறிதாக மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன. மருத்துவ உதவியை நாட வேண்டிய கட்டாயம் கூட மனச்சோர்வாக அமையலாம். 'அல்செய்மர்' நோய், மூளை நோய்குறி நிலை, வயதானவர்களுக்கே உரித்தான மூளைக் கோளாறுகள் போன்றவையும் முதியவர்களிடம் மனச்சோர்வை அதிகப்படுத்திவிடுகிறது.
மனச்சோர்வுக்குச் சிகிச்சை அளிப்பது எப்படி?
உளவியல் சிகிச்சையும் சோர்வுநீக்கிகளும் Anti Depressant
தருவதன் மூலம் மனச்சோர்வுக்குச் சிகிச்சை அளிக்கலாம். ஏதாவது ஒன்றை மட்டும் பின்பற்றாமல், உளவியல் சிகிச்சையோடு சேர்வு நீக்கிகளும் தருவதால், மனச்சோர்வை எளிதாகக் குணப்படுத்திவிடலாம். சோர்வுநீக்கிகள் மனச்சோர்வுக்கான அறிகுறிகளை விரைந்து நீக்குகிறது. வாழ்வின் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான திடத்தை உளவியல் சிகிச்சை உதவுகிறது.
1.
உளவியல் சிகிச்சை
உளவியல் சிகிச்சை மருத்துவரால் அல்லது தொழிமுறை உளவியல் ஆலோசனை வல்லுநரால் நோயாளிக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர், நெருங்கிய நண்பர்களிடம் கூட தன்னுடைய உணர்வுகளை எடுத்துக்கூற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதே சமயம், நோயாளியையும் நோயின் தன்மையும் நன்கு புரிந்துகொண்டு, பிரச்னையைக் காதுகொடுத்துக் கேட்கக்கூடிய உளவியல் சிகிச்சை மருத்துவர், நோயாளிக்கு உரிய ஆறுதலை அளிக்க முடிகிறது.
2.
சோர்வுநீக்கி
ஒருவர் நீண்ட நாட்களாக மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது கடுமையான மனச்சோர்வால் பாதிக்கப்ட்டிருந்தாலோ, அவருக்கு அவசியம் சோர்வுநீக்கிகள் தரப்படவேண்டும். செலக்டிவ் செரோடின் நிபூயூக் இன்ஹிபிடர், மோனோமைன் ஆக்கிசிடைஸ், இன்ஹிபிடர், லிதியம், செரோடோஎனர்ஜிக் நாராரெஜினிக் ரீ-அப்டேக் இன்ஹிபிடர் போன்றவை மனச்சோர்வுக்கு வழக்கமாகத் தரப்படும் ஆங்கில மருந்துகளாகும். மனச்சோர்வு மருந்துகளின் வீரியத்தை அதிகப்படுத்தவே மனநிலையைச் சமன்படுத்தும் தன்மையுடைய சோடியம் வால்பொரேட் கார்போமைசின், லிதியம் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளக்கூடாது.
மருத்துவரின் அறிவுரையின்றி மருந்து சாப்பிடுவதை நிறுத்தக்கூடாது.
மனச்சோர்வுக்கான மருந்து சாப்பிடும்போது வழக்கமான உணவு முறையைப் பின்பற்றலாம். மாற்றம் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால் மட்டும், மருந்துகளான நோய்க்கொல்லிகள், வலிநிவாரணிகள், கருத்தடை மாத்திரை போன்றவற்றோடு ஒத்துப்போகும் தன்மையை சேர்வு நீக்கிகள் கொண்டுள்ளன.
மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர் நிச்சயம் மது அருந்தக் கூடாது. மது போதையை அளிக்கும் என்பதோடு மருந்தின் வீரியத்தையும் குறைத்துவிடும்.
சோர்வுநீக்கிகளால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன?
மனச்சோர்வுக்குத் தரப்படும் மாத்திரைகள் உங்கள் பதற்றத்தையும் படபடப்பையும் குறைக்கும் என்றாலும், சோர்வுநீக்கிகளால் லேசான மற்றும் தற்காலிக பின்விளைவுகள் இருக்கலாம். இவை ஓரளவுக்கு உங்களைப் பாதிக்கும் என்றாலும், கவலைப்படத்தக்க அளவுக்கு மோசமான சூழலை உருவாக்காது. அதே நேரத்தில், இந்தப் பின்விளைவுகள் உங்கள் அன்றாட நடவடிக்கைகளைப் பாதிக்கும் அளவுக்கு அதிகமாக இருந்தால், உங்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் கூறத் தயங்காதீர்கள்.
பொதுவாக ஏற்படும் பின்விளைவுகளும் அதற்கான மாற்று வழிமுறைகளும்:
ü
வாய் உலர்ந்துபோதல் - நிறைய தண்ணீர் குடியுங்கள்
ü
மலச்சிக்கல் - நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள் மற்றும் பயிறு வகைகளைச் சாப்பிடுங்கள்
ü
தலைச்சுற்றல் - படுக்கையிலிருந்தோ அல்லது நாற்காலியிலிருந்தோ எழுந்திருக்கும்போது மெதுவாக எழுந்து நில்லுங்கள்.
ü
மயக்க நிலை - இந்த அறிகுறி சீக்கிரம் மறைந்துவிடும்; இந்த நிலையில் வாகனம் ஓட்டாதீர்கள்; பெரிய இயந்திரங்கள் இயக்குவதையும் தவிர்க்க வேண்டும்.
புதிதாக வந்துள்ள சோர்வுநீக்கிகளும் அதன் பின்விளைவுகளும்:
Ø
தலைவலி - வழக்கமாக இது கொஞ்சம் நாட்களில் போய்விடும்.
Ø
வாந்தியெடுக்கும் உணர்வும் வயிற்றைப் பிசைவது போன்ற உணர்வு - இந்த அறிகுறி தொடர்ந்து இருந்தால் சாப்பாட்டுக்குப் பிறகு மாத்திரை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
Ø
பதற்றமும் தூக்கமின்மையும் - சில வாரங்களுக்கு இந்த நிலை நீடிக்கும். காலப்போக்கில் இதுரு சரியாகிவிடும்; அப்படி இல்லாவிட்டால் மருத்துவரைக் கலந்தாலோசித்துக் கொண்டு மருந்து சாப்பிடும் அளவைக் குறைத்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு நீங்களே எப்படி உதவிக்கொள்ள முடியும்?
எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள்
Ø
உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு துக்கரமான நிகழ்வோ அல்லது கடுமையான சிக்கலோ ஏற்பட்டிருந்தால், அதைப் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல், உங்களுக்கு. நெருக்கமானவர்களிடம் மனம்விட்டுப் பேசுங்கள். உங்களுக்கு மனக்காயத்தை ஏற்படுத்திய அந்த மோசமான அனுபவங்களை பலரிடம், பல முறை பகிர்ந்துகொள்ளும்போது, உங்களுக்கு ஆறுதல் கிடைக்கிறது; வாய்விட்டு அழுவதால் மனச்சுமை குறைக்கிறது.
Ø
மனம் இயற்கையாக குணமடைய இது ஒரு வழிமுறை.
பணியைப் பகிர்ந்து செய்யுங்கள்:
Ø
நிறைவேற்றுவதற்குக் கடுமையான எந்த வேலையையும் செய்யாதீர்கள். பெரிய வேலைகளைப் பல சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொன்றாகச் செய்யுங்கள். வேலகளை வரிசைப்படுத்திக்கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் செய்து முடியுங்கள்.
மூளைக்கு வேலை கொடுங்கள்
Ø
வீட்டைவிட்டு வெளியே போய் ஏதாவது உடற்பயிற்சி செய்யுங்கள். கொஞ்சம் தூரம் காலாற நடந்துவிட்டு வருவது நல்லது. வேறு வேலை செய்யும் மனநிலையில் இல்லாவிட்டால், வீட்டில் ஏதாவது சிறு வேலைகளைச் செய்யலாம்.
Ø
இப்படி வேலை செய்வது உங்கள் மனக்காயத்தை ஆற்றும்; மனம் அமைதி அடையும்.
சரிவிகித உணவு
Ø
உங்களுக்குச் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு (அல்லது பசி) இல்லாவிட்டாலும், வேளாவேலைக்கு எல்லா சத்துக்களும் நிறைந்த உணவை நன்றாகச் சாப்பிடுங்கள்.
மது அருந்துவதைத் தவிர்க்கவும்
Ø
மது அருந்தி உங்கள் சோகத்தைத் தணித்துக்கொள்ளலாம் என்ற சபலத்திற்குத் தடைபோடுங்கள். உண்மையில் மது அருந்துவது, உங்கள் மனநிலையை மேலும் மோசமாக்கும்.
Ø
தற்காலிகமான நிறைவு கிடைத்ததைப் போல் நீங்கள் உணர்ந்தாலும், அது உங்கள் மனச்சோர்வை மேலும் அதிகப்படுத்திவிடும். உங்கள் உடல்நிலைக்கும் அது நல்லதல்ல.
தூக்கமின்மை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதீர்கள்
Ø
தூக்கம் வரவில்லை என்றால், அதற்காக அதிகம் கவலைப்படாதீர்கள். ஏதாவது வானொலி நிகழ்ச்சியைக் கேளுங்கள்; தொலைக்காட்சி பாருங்கள். உங்களுக்குத் தூக்கம் வரவில்லை என்றாலும், உடம்பைப் படுக்கையில் கிடத்துங்கள். அதுவே உங்கள் சோர்வை ஓரளவுக்குப் போக்கும்.
உங்களுக்கே நீங்கள் அவகாசம் கொடுங்கள்
Ø
உங்களைப் போலவே பலரும் தங்கள் வாழ்க்கையில் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் நீங்களும் இதிலிருந்து நிச்சயம் விடுபட்டு வெளியே வருவீர்கள் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மனச்சோர்வு உங்களுக்கு ஒரு பயனுள்ள அனுபவமாக மாறலாம். உங்கள் சூழல்களையும் உறவுகளையும், நீங்கள் நன்றாகப் பரிந்துகொள்ள இந்த வாய்ப்பு உதவுகிறது. வாழ்க்கையில் இதுவரை நீங்கள் எடுக்கத் தயங்கிய முக்கியமான முடிவுகளை எடுக்கும் துணிவும் அறிவும் மனோதிடமும் தற்போது உங்களுக்குக் கிடைக்கும்.
உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – மன சோர்வு, டிப்ரசன், மன அழுத்தம், தாழ்வுமனப்பாண்மை – 20-12-2013
– சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==